இலங்கையின் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள இளவரசர் எட்வர்ட் இலங்கை விஜயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 31, 2018

இலங்கையின் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள இளவரசர் எட்வர்ட் இலங்கை விஜயம்

இலங்கையின் 70ஆவது தேசிய சுதந்திர தின விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரிட்டன் அரச குடும்பத்தைச்சேர்ந்த இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசியும் இன்று கொழும்பை வந்தடைந்தனர்.

பிற்பகல் 12.30 மணியளவில் இலங்கை வந்தடைந்த இவர்கள் ஜந்து நாட்களுக்கு இங்கு தங்கியிருப்பார்கள். இக்காலப்பகுதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். 

எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார். 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உறுப்பினராக இணைந்துக்கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பை ஆரம்பித்தவர் எலிஸபெத் மகாராணியாவார்

No comments:

Post a Comment