புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 31, 2018

புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு, புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை இலங்கை மத்திய வெளியிடப்பட்டுள்ளது. நான்கு மதங்களின் வழிபாட்டுத் தளங்களும் இந்த ஆயிரம் ரூபா நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நான்கு இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் உருவங்களும் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாளில் பொறிக்கப்பட்டுள்ளன. 5 மில்லியன் எண்ணிக்கை கொண்ட நாணயத் தாள்கள் வெளியிடப்படவுள்ளதுடன் நாணயத்தாளின் தொடர் இலக்கம் S70Æ1 000001 – S70Æ5 1000000 ஆக இருக்கும். தாளின் திகதி 2018.02.04 ஆகும்.

இந்நாணயத் தாள் இலங்கையில் எந்தவொரு தொகைக்குமான கொடுப்பனவிற்கும் சட்டரீதியான நாணயமாக இருக்கும் என்பதுடன் இது சுற்றோட்டத்திலிருக்கும் பொழுது மத்திய வங்கியின் பொறுப்பாகவும் இருக்கும். நாணயத்தாளை உத்தியோக பூர்வமாக  மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நேற்று கையளித்தார். 
ஞாபகார்த்த நாணயத்தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ளது. அதேநேரம் ஆரம்பத் தொடர் இலக்கங்களுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான நாணயத் தாள்கள் கவர்ச்சிகரமான மடிப்பொன்றில் வைக்கப்பட்டு ஒவ்வொன்றும் ரூ.1,300 இற்கு இல.54, சதம் வீதி, கொழும்பு 01 இல் அமைந்துள்ள பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலையிலும் மத்திய வங்கியின் அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, திருகோணமலை மற்றும  கிளிநொச்சி பிரதேச அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment