பாகிஸ்தான் சாலை திட்டத்திற்கு வழங்க இருந்த நிதி நிறுத்தி வைப்பு சீனா அறிவிப்பு. - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 5, 2017

பாகிஸ்தான் சாலை திட்டத்திற்கு வழங்க இருந்த நிதி நிறுத்தி வைப்பு சீனா அறிவிப்பு.

பாகிஸ்தானுக்கு சாலை அமைக்கும் திட்டத்திற்கு வழங்க இருந்த நிதியை சீனா நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை அமைப்பு நிதியை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால் பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட இருந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் பெருமளவு பாதிக்கப்படும் நிலை உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா தனது பழங்கால பட்டு பாதையை மீட்டெடுத்து வருகிறது. 

இதில் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முக்கிய சாலை அமைப்பு திட்டங்களுக்கு சீனா நிதியுதவி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. சீனா - பாகிஸ்தான் பொருளாதார விரைவு சாலை திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சீனாவில் ஜிங்ஜியாங் பகுதியுடன் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியுடன் இணைக்க சாலை வசதி ஏற்படுத்தப்படும். 

சீனாவின் உதவியை நம்பி பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட 210 கிலோ மீட்டர் தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இந்த சாலை அமைப்பு திட்டத்தை மேற்கொள்வதில் ஊழல் புகுந்து விளையாடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, நிதியுதவி அளிப்பதை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

No comments:

Post a Comment