பாபர் மசூதி வழக்கு 2018 பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு. - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 5, 2017

பாபர் மசூதி வழக்கு 2018 பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதிக்கு விசாரிக்க வேண்டும் என சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தினார். ஆனால் இந்த வழக்கை ஒத்தி வைக்காமல் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என உத்தர பிரதேச அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால் உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. பிப்ரவரி 8ஆம் திகதி முதல் தொடர் விசாரணை நடைபெறும். வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என யாரும் கோரிக்கை வைக்க கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு காணவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே அயோத்திக்கு பதில் லக்னோவில் மசூதி கட்டலாம் என ஷியா தரப்பு யோசனையை முன்வைத்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று (05) மீண்டும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. 

இந்த விசாரணையின் போது சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், குறுகிய காலத்தில் 19,000 பக்க ஆவணங்களை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா எப்படி தாக்கல் செய்தார் என கேள்வி எழுப்பியுள்ளார். தங்களுக்கும் மனுதாரர்களுக்கும் அனைத்து ஆவணங்களையும் தரவும் இல்லை என கபில்சிபல் வாதாடினார். 

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையின் போதெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கின் விசாரணையை 2019ஆம் ஆண்டு ஜூலை 15க்கு ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டார். மேலும் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் எனவும் கபில் சிபில் கோரி்க்கை வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 8ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment