பூநகரி பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைபாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சமூகமயப்படுத்தப்பட்ட 27 முன்னாள் போராளி குடும்பங்கள், போரினால் பாதிக்கப்பட்ட 23 பெண் தலைமைத்துவ குடும்பங்கள், 15 மாற்றுத்திறனாளிகள் குடும்பம், 12 போரினால் இறந்தவர்களின் குடும்பங்கள், 6 காணாமல் போனோரின் குடும்பங்கள் தமிழ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய 4 குடும்பங்கள் அடங்கலாக 110 குடும்பங்களுக்கு மதிப்பிடப்பட்ட தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக பூநகரி பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களில் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment