இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான சந்திக்க ஹத்துருசிங்க, நேற்று தனது பயிற்சிகளை ஆரம்பித்தார்.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான சந்திக்கவுடனான பயிற்சியில் தேசிய அணி வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அணி பங்களாதேஷ் செல்லவுள்ள நிலையில் பயிற்சிகள் தீவிரமாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இலங்கை அணியின் தலைமையும் மாறலாமாம். இலங்கை அணித் தலைவராக மீண்டும் மெத்தியூஸ் அல்லது சந்திமால் நியமிக்கப்படலாம் என்றும் உத்தியோகபூர்வ மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment