காரில் மோதி படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். - News View

About Us

About Us

Breaking

Friday, December 29, 2017

காரில் மோதி படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த காரானது வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த குறித்த பெண்ணுடன் மோதியதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 28 வயதான புவிராசா நிலாந்தினி என்ற இளம்பெண்ணாவார். குறித்த விபத்திற்கு காரணமான கார் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment