8ஆம் திகதி வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.! - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 5, 2017

8ஆம் திகதி வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.!

வட அந்­த­மானில் ஏற்­பட்ட குறைந்த வலு­வான தாழ­முக்­கத்தின் தொட­ராக வங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உருவாகும் கடுங்­காற்று இலங்­கையின் கரை­யோர பிர­தே­சங்­களில் இன்று மற்றும் நாளைய தினத்தில் வீசும் நிலையுள்ளது. இதனால் ஆழ்­க­டலில் மீன் பிடிக்க செல்வோர், சுழி­யோ­டிகள், கடல் பயணங்களை மேற்­கொள்வோர் எவரும் கட­லுக்கு எதிர்­வரும் 8ஆம் திகதி வரையில் செல்ல வேண்டாம் என அனர்த்த முகா­மைத்­துவ நிலைய பணிப்­பாளர் நாயகம் பிரேம லால் தெரி­வித்தார். 

இலங்­கையை சுற்றி வீசும் கடுங்­காற்­றினால் எதிர்­வரும் நாட்­களில் ஏற்­படப் போகும் அசா­தா­ரண நிலை­மையை எதிர்­கொள்ள அவசரகால அவ­தான நட­வ­டிக்­கைகள் குறித்து ஊடகவியலாளர்களை தெளி­வுப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பொன்று நேற்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையத்தில் நடை­பெற்­றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

வட அந்­த­மானில் ஏற்­பட்­டுள்ள குறைந்த வலு­வான தாழமுக்கத்தினால் ஏற்­பட்ட கடுங்­காற்று இன்று காங்­கேசன் துறை, திரு­கோ­ண­மலை, பொத்­துவில், காலி, அம்­பாந்­தோட்­டை பகுதிகளில் வீசக் கூடும். எனவே அந்த பிர­தே­சங்­களை சேர்ந்த கரை­யோர வாழ் மக்கள் மிகவும் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்­றார்கள். 

இன்று இலங்கை கடற்­ப­ரப்பில் காற்றின் வேகம் 100க்கு 50 வீதம் அதிக­மாக இருப்­ப­தோடு, வட­கி­ழக்கில் நாளை இதன் வேகம் இன்னும் அதி­க­ள­வாக காணப்­படும். இந்த காற்றின் வேகம் எட்டாம் திக­தி­ய­ள­வி­லேயே குறை­வ­டையக் கூடும் என எதிர் பார்க்கப்படுகின்­றது. மேலும் இந்த காற்றின் வேகம் 70 கிலோ மீற்றருக்கு அதி­க­மாக இலங்­கையை கடந்து செல்லும் இவ்வேளையில் கடல் மிகவும் கொந்­த­ளிப்­புடன் காணப்­படும். இதனால் கடற்­க­ரை­ய­ருகில் உள்ள மீன­வர்­களை தொழில் உபகரணங்­களை பாது­காத்துக் கொள்­வ­தோடு கட­லுக்குள் பயணிப்­பதை முற்­றாக தவிர்த்துக் கொள்­ளவும் அறிவுறுத்தப்படுகின்­றார்கள்.

No comments:

Post a Comment