செ. தேன்மொழி
கண்டி - கட்டுகஸ்தொட்ட பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிக்கு புறம்பாக இயங்கிய கல்வி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தில் 50 மாணவ, மாணவிகளை தங்கவைத்து வகுப்புகளை நடத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் வகுப்புகளை நடத்தியமை தொடர்பில் குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாக குழுவைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment