எம்.மனோசித்ரா
இலங்கையில் கடந்த இரு தினங்களாக மூவாயிரத்திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளன.
நேற்று 3297 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. இவர்களில் வெளிநாட்டு பிரஜைகள் மூவரும், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 30 இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர். ஏனைய 3264 தொற்றாளர்களும் உள்நாட்டில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர்.
நேற்று கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இம்மாவட்டத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை 648 ஆகும்.
இதேபோன்று கொழும்பில் 630 தொற்றாளர்களும், களுத்துறையில் 409 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர். ஏனைய 1577 தொற்றாளர்களும் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து அடையாளங்காணப்பட்டனர்.
அதற்கமைய இதுவரையில் நாட்டில் ஒரு இலட்சத்து 95843 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 98534 தொற்றாளர்கள் புத்தாண்டு கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர்.
இன்று காலை தொற்றுக்குள்ளான 1683 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதற்கமைய இதுவரையில் ஒரு இலட்சத்து 62397 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். 31839 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஹோட்டல்கள் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் 56 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4553 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment