அசாத் சாலி தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு - அடுத்த வாரம் பரிசீலனைக்கு வருகிறது அடிப்படை உரிமை மீறல் மனு - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

அசாத் சாலி தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு - அடுத்த வாரம் பரிசீலனைக்கு வருகிறது அடிப்படை உரிமை மீறல் மனு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சிறப்புக் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்ட நிலையில், அவர் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆரம்ப கட்ட விசா­ர­ணையின் அறிக்கை சட்டமா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. 

சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு இலக்கம் 1 இன் பொறுப்பதிகாரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜயந்த பயா­க­லவின் பொறுப்பில், அசாத் சாலி தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரும் நிலை­யி­லேயே, இந்த முதல் கட்ட விசா­ரணை அறிக்கை சட்டமா அதி­ப­ருக்கு அனுப்­பப்பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. 

அந்த அறிக்­கை­யினை ஆராய்ந்த பின்னர் சட்டமா அதிபர் அளிக்கும் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் சி.ஐ.டி. செயற்­படும் என பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரிவிக்­கின்­றன.

அசாத் சாலியின் கைது தொடர்பில் பிர­தா­ன­மாக மாவ­னெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தை கோடிட்டு, அடிப்படைவாதிகளை பாது­காத்­த­தாக கூறி கொழும்பு பிர­தான நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல முன்­னி­லையில் சி.ஐ.டி. பீ அறிக்கை சமர்ப்­பித்­துள்ள நிலையில், அதனை மையப்­ப­டுத்­தியே விசாரணைகள் தொடர்­கின்­றன.

இவ்­வா­று­ அசாத் சாலியை தடுத்து வைத்து விசா­ரணை செய்வதற்கான அனு­ம­தியை, பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ, MOD/LEG/PTA/21/2021 எனும் கடிதம் ஊடாக மார்ச் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வழங்­கி­யுள்ளார். 

அர­சி­ய­ல­மைப்பின் 44 (2) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து வாசிக்கப்­பட வேண்­டிய 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்­டத்தின் 9 (1) ஆம் பிரிவின் கீழ் இந்த தடுப்புக் காவல் அனு­மதி ஜனா­தி­ப­தி­யினால் குற்றப் புல­னாய்வுத் திணைக்களத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் கைது மற்றும் தடுத்து வைப்­புக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு அடுத்­த­ வாரம் பரிசீ­ல­னைக்கு எடுத்­துக்­ கொள்­ளப்­படும் என தெரிகிறது. 

அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Vidivelli

No comments:

Post a Comment