உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் : மைத்திரி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நட்டஈடு கோரி 289 பேர் வழக்குத் தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் : மைத்திரி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நட்டஈடு கோரி 289 பேர் வழக்குத் தாக்கல்

போது­மான உளவுத் தக­வல்கள் கிடைத்­தி­ருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கா­மையை மையப்­ப­டுத்தி, முன்னாள் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன உள்­ளிட்ட 6 பேருக்கு எதி­ராக, பாதிக்­கப்­பட்ட 289 பேர் இரு மாவட்ட நீதி­மன்­றங்­களில் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்­துள்­ளனர்.

கொழும்பு மற்றும் நீர்­கொ­ழும்பு மாவட்ட நீதி­மன்­றங்­களில் இந்த வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­துடன், அவை ஊடாக பாதிக்கப்­பட்­ட­வர்கள் கோரி­யுள்ள நட்ட ஈட்டின் மொத்த பெறு­மதி 1250 மில்­லியன் ரூபா­வாகும்.

உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கட்டுவபிட்­டிய தேவா­லயம் மீது நடாத்­தப்­பட்ட தற்­கொலைத் தாக்குதலில் பாதிக்­கப்­பட்ட 182 பேர் நீர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நட்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்­துள்­ளனர். 

கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்தில் இடம்­பெற்ற தற்கொலை தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்ட 107 பேர் கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் வழக்குத் தொடர்ந்­துள்­ளனர்.

இந்த அனைத்து நட்டஈடு கோரும் வழக்­கு­க­ளிலும் பிர­தி­வா­தி­க­ளாக, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, தேசிய உளவுச் சேவையின் முன்னாள் பணிப்­பா­ளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ரு­மான நிலந்த ஜய­வர்­தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிர­தி­வா­தி­களாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஷமில் பெரேரா, சட்டத்தரணி சந்துன் நாகஹவத்த உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment