தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நாளை முதல் வழங்க முடிவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 27, 2021

தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நாளை முதல் வழங்க முடிவு

கொவிட்-19 தடுப்பூசி திட்டத்திற்கமைய, ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நாளை முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, முதற் கட்டமாகை கொவிட்-19 தடுப்பு பணியில் முன்னணியில் நின்று செயற்படும் சுகாதார சேவையில் உள்ள ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 நோய்க்கு எதிரான அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்/மாத்திரையை எதிர்வரும் மே மாதம் முதலாவது வாரத்திலிருந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் (19) சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் தொடர்பான ஆலோசனைக் குழு கூடி கலந்துரையாடியதைத் தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்கும் திட்டம் ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு, இதற்காக ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி வரை 925,642 பேருக்கு இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment