மருதானையில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

மருதானையில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையின்போது மருதானை பகுதியில் 1.78 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

மருதானை, லொக்கேட் பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றி‍லேயே இந்த ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதியானது ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர் தொடர்பான விவரங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஹெரோயின் தொகை மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அது இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment