பண தூய்மையாக்கம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ETI நிதி நிறுவனத்தின் (Edirisinghe Trust Investment) முன்னாள் பணிப்பாளர்கள் நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகிய நால்வரும் இன்று (01) பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
சந்தேகநபர்கள் நால்வரும் பண தூய்மையாக்கம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய கடந்த மார்ச் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment