4 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

4 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

நெல்லியடியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 25 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் நகரில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார் என்று மாவட்ட போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment