மட்டக்களப்பில் அதிகரித்து வரும் கொரோனா : 24 மணித்தியாலத்தில் 24 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 13, 2021

மட்டக்களப்பில் அதிகரித்து வரும் கொரோனா : 24 மணித்தியாலத்தில் 24 பேருக்கு கொரோனா

திருக்கோவில் நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 420 ஆக அதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் என அவர் இன்று (புதன்கிழமை) குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் 12 பேர் என்பதுடன், காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி சுகாதாரப் பிரிவுகளில் தலா நால்வரும் வெல்லாவெளி சுகாதாரப் பிரிவில் மூவரும் களுவாஞ்சிக்குடி சுகாதாரப் பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் 420 ஆக உயர்வடைந்துள்ளது இவர்களில் 145 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளர், 278 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் எழுமாறாக பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment