அத்தியாவசிய சேவையாளர்கள் அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்கு பயன்படுத்தலாம் : பிரதி பொலிஸ்மா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

அத்தியாவசிய சேவையாளர்கள் அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்கு பயன்படுத்தலாம் : பிரதி பொலிஸ்மா அதிபர்

அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இதன்படி சுகாதார சேவைகள், விமான நிலையம், வெளிவிவகார அமைச்சு, தீயணைப்பு திணைக்களம் மற்றும் வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளில் பணி புரிவோரே தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு வேளை அனுமதிக்கு பயன்படுத்த முடியும்.

எவ்வாறாயினும் அவர்கள் தங்கள் பணியிடத்துக்குச் செல்லும் போதும் வெளியேறும் போதும் கொவிட்19 சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment