இன்று நள்ளிரவு வரை கொழும்பின் பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் நீர்க் கசிவு காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அச்சபை அறிவித்துள்ளது.
எனவே, பராமரிப்பு வேலை காரணமாக இன்று (30) பிற்பகல் 2.00 மணி முதல், நள்ளிரவு 12.00 மணி வரையான 10 மணித்தியால காலப்பகுதியில், கொழும்பின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என, அச்சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment