வாடகை நெருக்கடிக்கு மனிதாபிமான அடிப்படையில் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

வாடகை நெருக்கடிக்கு மனிதாபிமான அடிப்படையில் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

இலங்கையின் கொரோனா அனர்த்த காலத்தில் வாடகை குடியிருப்பாளர்கள், வாடகை சிறு வியாபாரிகள் ஆகியோர் உரிமையாளர்களுக்கு வாடகை கட்டமுடியாமல் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் மானியம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று கூடிய அமைச்சரவையிலேயே இந்த விடயம் தொடர்பான கோரிக்கை ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்தார். 

இன்றைய அமைச்சரவையில் இந்த விடயத்தை முன்னிறுத்தி உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது நாடு இயல்பு நிலைக்க திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாடகை பிரச்சினையால் வாடகை கூடியிருப்பாளர்கள் படும் இன்னல்களை சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக வாடகை கட்டடங்களை வாடகைக்கு வழங்கியவர்களும் தமது பொருளாதார வருமானத்திற்காகவே வழங்கியிருந்தனர். அதேபோல வாடகைக்கு பெற்றுக் கொண்டவர்களும் தமது மாதாந்த தொழிலை மையமாக கொண்டே பெற்றிருந்தனர்.

அந்த வகையில் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் வாடகைக்கு கடைகளை, வீடுகளை, அறைகளை வழங்கியுள்ள உரிமையாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டுமெனவும், அரசும் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தார்.

அந்த வகையில் உரிமையாளர்கள் பாதிக்காத வகையிலும் வாடகைக்கு பெற்றவர்கள் நெருக்கடியை சந்திக்காத வகையிலும் வாடகைப் பணத்தை குறைத்து அல்லது காலந்தாழ்த்தியோ செலுத்தும் வகையில் இரு தரப்பினரதும் நியாயங்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த மனிதாபிமானம் மிக்க கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் இது தொடர்பில் உடனடி கவனத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி அதனை ஆராய்வதாக தெரிவித்ததுடன் இது தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் நடக்குமாறு வீடு மற்றும் கடைகளின் உரிமையாளர்களிடம் அரசு கேட்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாளாந்த வருமானம் இன்றி தவிக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு அத்தொழிலை முன்னெடுக்க முடியாதுள்ளவர்களுக்கு அனர்த்த நிவாரணமாக வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment