(செ.தேன்மொழி)
சீனாவிலிருந்து வரும் பயணிகளை தொற்று நீக்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பில் அக்கறையின்றி இருப்பதால் நாட்டு மக்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸின் காரணமாக பெரும் அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
வைரஸ் காரணமாக பெரும் தொகையானோரை ஒன்றுகூட வேண்டாம் என்று அரசாங்கம் அறிவுருத்தியுள்ளது. இதனால் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டுள்ள நெறுக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு எமது தேர்தல் பிரசாரங்களையும், அதற்கான மக்களின் பங்குபற்றலையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மேற்கொள்ள எதிர்பார்த்திருக்கின்றோம்.
வேட்பு மனு தாக்கலின் பின்னரே எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதுடன், இதன்போது குறிப்பிட்டளவில் மாத்திரமே பிரசாரங்களை நடத்த எதிர்பார்த்திருக்கின்றோம். எமது கட்சியின் வேட்பாளர் பெயர்ப்பட்டியலும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார பிரிவினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment