எல்ல - வெல்லவாய பஸ் விபத்து : ஜீப் வண்டி சாரதி கைது - News View

About Us

About Us

Breaking

Friday, September 5, 2025

எல்ல - வெல்லவாய பஸ் விபத்து : ஜீப் வண்டி சாரதி கைது

15 பேர் உயிரிழந்த எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பஸ் எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment