2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிதியாண்டின் காலாண்டில், இலங்கை மின்சார சபை ரூ. 5.31 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிதியாண்டின் காலாண்டில், சபையானது ரூ. 18.47 பில்லியன் நட்டத்தையே ஈட்டியிருந்தது.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தினால் இந்த இலாபத்தை அடைய முடிந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டில் சபையால் ஈட்டப்பட்ட ரூ. 34.5 பில்லியன் இலாபத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் ஈட்டப்பட்ட இலாபம் 85% குறைவாகும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணம் சுமார் 20% குறைக்கப்பட்ட நிலையில், இது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத காலாண்டில் அறிவிக்கப்பட்ட இழப்புக்கு பெரும்பாலும் காரணமாகும்.
இது தொடர்பில், சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் அடுத்த தவணையைப் பெறுவதற்கு, இலங்கை செலவு ஈடுகட்டும் மின்சார விலையை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறியது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மின்சார கட்டணம் மீண்டும் திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment