ஒலி பெருக்கியில் அதான் கூற பொலிஸாரால் தடை விதிப்பு : அநாமதேய முறைப்பாட்டையடுத்து மாத்தளையில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 3, 2025

ஒலி பெருக்கியில் அதான் கூற பொலிஸாரால் தடை விதிப்பு : அநாமதேய முறைப்பாட்டையடுத்து மாத்தளையில் சம்பவம்

மாத்­தளை, உக்­கு­வளை, ரைத்­த­லா­வலை மஸ்­ஜிதுல் ஹுதா ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் செவ்­வாய்க்­கி­ழமை ழுஹர் மற்றும் அஸர் தொழுகைக­ளுக்­கான அதான் ஒலி ­பெ­ருக்கி ஊடாக ஒலி­க்க­வில்லை எனத் தெரி­ய­வ­ரு­கி­றது.

118 எனும் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­திற்கு கிடைக்கப் பெற்ற அநா­ம­தேய முறைப்­பாட்டைத் தொடர்ந்து உக்­கு­வளை பொலிஸாரின் அறி­வு­றுத்­தலின் பேரில் மேற்­படி இரு வேளை­க­ளிலும் அதான் கூறு­வது நிறுத்­தப்­பட்­ட­தாக பள்­ளி­வா­சலில் தலைவர் ஏ.சி.எம். நிசார் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், கடந்த நான்கு வரு­டங்­க­ளுக்கு மேலாக இப்பிர­தே­சத்­தி­லுள்ள யாரோ ஒரு­வரோ அல்­லது குழு­வி­னரோ இவ்­வாறு எமது பள்­ளி­வா­சலில் அதான் கூறு­வது தமக்கு இடைஞ்சலாக உள்­ள­தாக பொலி­சா­ருக்கு முறைப்­பாடு செய்து வருகிறார்கள். பொலி­சாரும் புல­னாய்வுப் பிரி­வி­னரும் அவ்­வப்­போது வந்து இது பற்றி எம்­மிடம் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வார்கள். 

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பொலிஸ் நிலை­யத்­திற்கு வரு­மாறு அழைத்த பொலிசார் தற்­போதும் 118 இலக்கம் ஊடாக முறைப்­பாடு கிடைத்­துள்­ளதால் பள்­ளி­வாசல் ஒலி­ பெ­ருக்­கியில் அதான் கூறு­வதை நிறுத்­து­மாறு கேட்டுக் கொண்­டார்கள்.

பொலிஸ் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் அவ்­வாறு கோரு­வ­தற்கு தமக்கு அதி­காரம் உள்­ள­தாக பொலிசார் தெரி­வித்­தனர். இத­னை­ய­டுத்து நாம் செவ்­வாய்க்­கி­ழமை ழுஹர் மற்றும் அஸர் வேளை­களில் ஒலி பெருக்­கியில் அதன் கூற­வில்லை. 

இத­னை­ய­டுத்து எமது பகு­தியில் சல­ச­லப்பு ஏற்­பட்­டது. மக்கள் இதற்கு எதி­ராக கவலை வெளி­யிட்­டனர். பிர­தேச அரசியல்வாதிகளின் கவ­னத்­திற்கும் இந்த விடயம் கொண்டு செல்லப்­பட்­டது. இத­னை­ய­டுத்து மேலி­டத்­தி­லி­ருந்து கிடைத்த உத்தரவுக்­க­மைய மீண்டும் அதான் கூறு­வ­தற்கு பொலிசார் அனுமதித்­தனர். இத­னை­ய­டுத்த அன்­றையதினம் மஃரிப் தொழுகை முதல் ஒலி­ பெ­ருக்­கி­யி­லேயே அதான் கூறப்­ப­டு­கி­றது.

எமது பள்­ளி­வா­சலில் மிகக் குறைந்த சப்­தத்­தி­லேயே அதானை ஒலி பரப்­பு­கிறோம். ஒலி­ பெ­ருக்­கி­களைக் கூட நிலத்தை நோக்­கியே வைத்துள்ளோம்.

இவ்­வாறு முறைப்­பாடு செய்­ப­வர்கள் யார் என்று அறி­யத்­த­ரு­மாறு நாம் பொலி­சா­ரிடம் கேட்ட போதிலும் அது தமக்குத் தெரி­யாது எனக் கூறுகின்றனர். 

பிரதேசத்தில் உள்ள சகோதர இன மக்கள் எம்முடன் மிக அந்நியோன்யமாகவே வாழ்ந்து வருகின்றனர். யாரோ தீய சக்திகள் வேண்டுமென்றே பிரச்சினையைத் தோற்றுவிக்க இவ்வாறு முறைப்பாடு செய்வதாகவே நாம் கருதுகிறோம்” என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment