5000 ரூபா தந்தால் விடுவிப்பதாக பொலிஸ் அதிகாரி கூறினார் : பிணையில் விடுதலையான பின் மாவனெல்லை சுஹைல் வெளியிட்ட தகவல் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 17, 2025

5000 ரூபா தந்தால் விடுவிப்பதாக பொலிஸ் அதிகாரி கூறினார் : பிணையில் விடுதலையான பின் மாவனெல்லை சுஹைல் வெளியிட்ட தகவல்

ஒன்­பது மாதங்­க­ளுக்கு முன்னர் தன்னைக் கைது செய்தபோது 5000 ரூபா தந்தால் உடன் விடு­விப்­ப­தாக தெஹி­வளை பொலிஸ் நிலையத்தில் கட­மை­யாற்றும் பொலிஸ் அதி­காரி ஒருவர் தன்­னிடம் கூறி­ய­தாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்ட நிலையில் நேற்றுமுன்­தினம் (15) பிணையில் விடுவிக்­கப்­பட்ட மாவ­னெல்­லையைச் சேர்ந்த 21 வய­தான இளைஞர் முகமட் சுஹைல் தெரி­வித்­துள்ளார். 

அச்­ச­மயம் தன்­னிடம் ஆயிரம் ரூபா பணமே இருந்­த­தா­கவும் அதனைக் கொடுக்க முற்­பட்டபோது அவர் ஏற்றுக் கொள்­ள­வில்லை என்றும் சுஹைல் மேலும் தெரி­வித்­துள்ளார்.

கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் தெஹி­வளை பிர­தே­சத்தில் வைத்து கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­ சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்ட நிலையில் நேற்று முன்­தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் பேஸ்புக் வழி­யாக அவர் வெளி­யிட்ட காணொளி ஒன்­றி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், “நான் தெஹி­வ­ளையில் வீதியால் நடந்து சென்று கொண்­டி­ருந்தபோது என்னை அழைத்த பொலிசார் எங்கு போகிறாய் எனக் கேட்­டனர். நான் தங்­கி­யி­ருப்­ப­தற்கு வீடு ஒன்றைத் தேடிச் செல்­வ­தாகக் குறிப்­பிட்டேன். 

எனது அடை­யாள அட்­டையைக் காண்­பிக்­கு­மாறு கேட்­டனர். நான் அப்­போது அடை­யாள அட்­டையை எடுத்து வந்­தி­ருக்­க­வில்லை எனக் கூறினேன். உட­ன­டி­யாக வீட்­டுக்குத் தொடர்பு கொண்டு அடை­யாள அட்­டையின் புகைப்­ப­டத்தை அனுப்­பு­மாறு கேட்டேன். வீட்டில் அடையாள அட்­டையை உடன் கண்­டு­பி­டிக்க முடி­யா­ததால் எனது கடவுச்சீட்டின் புகைப்­ப­டத்தை அனுப்­பி­னார்கள். அதனை பொலிசாருக்கு காண்­பித்தேன். 

அப்­போது பொலிசார் எனது கைய­டக்கத் தொலை­பே­சியில் சேமித்து வைக்­கப்­பட்­டுள்ள புகைப்­ப­டங்கள், வீடி­யோக்­களை பார்வையிட்டார்கள். அதன்­போது இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் விவகாரம் தொடர்­பான புகைப்­ப­டங்கள், வீடி­யோக்கள் இருந்­தன. நான் விமான போக்­கு­வ­ரத்து துறையில் கல்வி கற்­பதால் விமானங்களின் படங்­களும் எனது தொலை­பே­சியில் இருந்­தன.

இவ்­வாறு என்னை அந்த இடத்தில் தடுத்து வைத்­தி­ருந்த சமயம் அந்த இடத்தில் இருந்த சுமார் 45 வயது மதிக்­கத்­தக்க பொலிஸ் அதி­காரி ஒருவர் 5000 ரூபா பணம் தந்தால் உன்னை இப்­போது விடு­விப்பேன் எனக் கூறினார். என்­னிடம் அப்­போது அவ்­வ­ளவு பணம் இருக்கவில்லை. வீட்­டி­லி­ருந்து 2000 ரூபா அள­வி­லேயே நான் பணத்தை எடுத்து வந்­தி­ருந்தேன். செல­வுகள் போக அந்த நேரத்தில் 1000 ரூபா அள­வி­லேயே மீத­மி­ருந்­தது. அதனைத் தரு­வ­தாக நான் கூறிய போதிலும் அவர் இணங்­க­வில்லை. அதன் பின்­னரே என்னை பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் சென்று என்னை பொலிஸ் நிலைய சிறைக் கூண்­டினுள் அடைத்­தனர்” என்றும் சுஹைல் தெரிவித்­துள்ளார்.

தனது விடுதலைக்காக முன்வந்து செயற்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான் உட்பட சட்டத்தரணிகள் மற்றும் குரல் கொடுத்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் சுஹைல் இதன்போது குறிப்பிட்டார்.

Vidivelli

No comments:

Post a Comment