மஹர, ஏக்கல பள்ளிவாசல்களின் பிரச்சினைக்கு தீர்வு : தாதியரின் ஆடை, இஸ்லாமிய நூல் இறக்குமதி குறித்தும் பேச்சு - முஸ்லிம் சிவில் சமூகத்துடனான சந்திப்பில் அரச தரப்பு உறுதி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 26, 2025

மஹர, ஏக்கல பள்ளிவாசல்களின் பிரச்சினைக்கு தீர்வு : தாதியரின் ஆடை, இஸ்லாமிய நூல் இறக்குமதி குறித்தும் பேச்சு - முஸ்லிம் சிவில் சமூகத்துடனான சந்திப்பில் அரச தரப்பு உறுதி

மஹர மற்றும் ஏக்கல பள்­ளி­வா­சல்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு சுமுகமான தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கிறோம். அத்­துடன், அப்­ப­கு­தி­க­ளுக்கு கள­வி­ஜ­யங்­களை மேற்­கொண்டு ஆராய்ந்து நில­மை­களை சீர்செய்ய வேண்­டி­யுள்­ளது என முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளி­டம் ஆளும் தரப்பு பிர­தி­நி­திகள் உறு­தி­ய­ளித்­துள்­ளனர்.

அத்­துடன், முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் ஏனைய பிரச்­சி­னைகள் குறித்து உரிய தரப்­புடன் கல­ந்­து­ரை­யா­டவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

முஸ்லிம் சமூகம் சம­கா­லத்தில் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்து அர­சாங்க தரப்பும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களும் ஆராயும் சந்­திப்பு நேற்று (25) மாலை வெளி­வி­வ­கார அமைச்சில் இடம்பெற்­றது.

வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத், புத்­த­சா­சன மற்றும் மத விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் ஹினு­தும சுனில் செனவி, பிரதி சபா­ந­யகர் டாக்டர் ரிஸ்வி சாலி, பிர­தி­ய­மைச்சர் முனீர் முழப்பர் மற்றும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஸ்லம் உள்ளிட்டோர் இச் சந்­திப்பில் அரச தரப்பில் கலந்­து­கொண்­டனர். 

முஸ்லிம் சிவில் சமூகம் சார்பில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய சூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி, அனைத்துப் பல்­க­லைக்­க­ழக முஸ்லிம் மாணவர் ஒன்­றியம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் உள்­ளிட்ட 20 இற்கும் மேற்­பட்ட முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டனர். அத்­துடன், கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த சிவில் அமைப்­பு­களின் பிரதிநிதிகளும் இச் சந்­திப்பில் கலந்­து­கொண்­டமை விசேட அமைசமாகும்.

வைத்­திய, தாதி மாண­வி­களின் ஆடை
வைத்­திய மாண­வி­களும் தாதி மாண­வி­களும் பயிற்சிக் காலத்தின்போது கலா­சார ஆடை அணிய முடி­யாத நிலை ஏற்படுத்தப்­பட்­டுள்­ளமை பெரும் சவா­லாக உள்­ளது என அனைத்து பல்­க­லைக்­க­ழக முஸ்லிம் மாண­வர்கள் ஒன்­றி­யத்தின் பிர­தி­நி­திகள் இதன்­போது சுட்­டிக்­கட்­டினர்.

இவ்­வாறு சீருடை பிரச்­சினை இருப்­ப­தனால் பல மாண­விகள் பயிற்சியை நிறைவு செய்­யாது இடை­ந­டுவில் கைவிடும் துரதிஷ்ட நிலை ஏற்­ப­டு­வ­தா­கவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டினர்.

இத­னி­டையே, கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தாடி­யுடன் விரிவுரைக்கு சென்ற மாணவர் ஒரு­வ­ருக்கு தொடர்ச்­சி­யாக கல்வி நடவ­டிக்கை மேற்­கொள்­வ­தற்கு இடை­யூறு விளைவிக்கப்படுகின்றது. இது விட­யத்­திலும் கவனம் செலுத்­தப்­பட வேண்டும் என ஏனைய சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் சுட்டிக்காட்­டினர்.

மாண­வர்­களின் ஆடை சுதந்­திரம் தொடர்பில் மேன்­மு­றை­யீட்டு நீதிமன்­றத்தின் உத்­த­ர­வொன்று இருக்­கின்ற நிலையில் அது கண்டுகொள்­ளப்­ப­டாமல் தொடர்ச்­சி­யாக இவ்­வா­றான செயற்பாடுகள் நீடித்து வரு­வ­தாக இந்த குழுவில் இருந்த சட்டத்தரணி­யொ­ருவர் அமைச்­சர்­க­ளிடம் சுட்­டிக்­காட்­டினார்.

இந்­நி­லையில் இதற்குப் பதி­ல­ளித்த கலா­சார அமைச்சர் ஹினு­தும சுனில் செனவி, இந்த விடயம் தொடர்பில் உலக நாடு­களில் பின்பற்றப்­படும் நடை­மு­றைகள் குறித்து ஆராய்ந்து பிரச்­சி­னைக்கு தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்க விரும்­பு­கிறோம். அத்­துடன், முஸ்லிம் மாண­விகள் எதிர்­நோக்கும் இவ்­வா­றான சவால்கள் குறித்து கல்வி அமைச்சு மற்றும் சுகா­தார அமைச்சு என்­ப­வற்­றுடன் கலந்தாலோசனை நடத்தி பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான வழிமுறைகள் பற்றி யோசிக்­கலாம் என தெரி­வித்தார்.

அத்­துடன், கிழக்கு மாகா­ணத்தில் இந்த விடயம் தொடர்பில் எவ்வாறான நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன எனவும் கேட்டறிந்­து­கொண்டார்.

ஜனாஸா விட­யத்தில் இறுக்­க­மான நடை­முறை
கொவிட் தொற்­றுக்கு பிறகு ஜனா­ஸாக்கள் விட­யத்தில் பொலி­ஸாரும் கிராம சேவ­கர்­களும் மிகவும் கடி­ன­மாக நடந்­து­கொள்­வ­தாக சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் இந்த சந்­திப்­பின்­போது அமைச்சர்களிடம் சுட்­டிக்­காட்­டினர்.

குறிப்­பாக, கொரோனா தொற்று காலப்­ப­கு­தியில் நடை­மு­றையில் இருந்த இறுக்­க­மான கட்­டுப்­பா­டு­களை தற்­போதும் பின்­பற்ற முயற்சி செய்­வதால் முஸ்லிம் சமூகம் பெரும் சவால்­களை எதிர்­கொள்­கி­றது. 

இவ்­வி­ட­யத்தில் கொரோனா பெருந்­தொற்­றுக்கு முன்னர் இருந்த நடை­மு­றையை பின்­பற்­று­வதே பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமையும். அல்­லா­விடி, 2023 ஆம் ஆண்டு இவ்­வி­ட­ய­மாக அர­சாங்­கத்தால் விசேட சுற்­று­நி­ருபம் ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. அதன்­படி செயற்­ப­டும்­போது ஜனாசா விவ­கா­ரங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு சவால்கள் இருக்கமாட்டாது எனவும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் எடுத்து­றைத்­தனர்.

மத­நூல்கள் இறக்­கு­ம­தியில் சிக்கல்
இதே­வேளை, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்லா­மிய மார்க்க நூல்கள் விட­யத்தில் பாது­காப்பு அமைச்சின் கெடு­பிடி தொடர்­வ­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் செய­லாளர் அர்கம் நூராமித் இதன்­போது குறிப்­பிட்டார்.

இறக்­கு­மதி செய்­யப்­படும் இஸ்­லா­மிய மார்க்க நூல்­களை நீண்ட நாட்­க­ளுக்கு சுங்கத் திணைக்­க­ளத்தில் தடுத்து வைக்க வேண்டாம். பொருத்­த­மாற்­ற­தாயின் நீண்ட நாட்­க­ளுக்கு இழு­பறி நிலையில் நூல்களை வைத்­தி­ருக்­காமல் அவற்றை மீளவும் ஏற்­று­மதி செய்­வதே சிறந்­தது எனவும் சுட்­டிக்­காட்­டிய உலமா சபையின் செய­லாளர் இஸ்லா­மிய நூல்­களில் மார்க்கம் தொடர்­பான பிரச்­சி­னைகள் இருப்பின் அது தொடர்பில் கவனம் செலுத்தி பரிந்­துரை வழங்குவதற்கு நாங்கள் தயா­ரா­கவே இருக்­கிறோம். ஆனால், பாதுகாப்பு தொடர்­பான பிரச்­சி­னைகள் இருக்­கி­றதா என்று எங்களால் பார்க்க முடி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

இது­வி­ட­ய­மாக கூடுதல் கவனம் செலுத்தி உரிய தரப்­புடன் பேசி தீர்வை பெற்றுத் தர நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இங்கு அமைச்­சர்கள் பதி­ல­ளித்­தனர்.

மஹர, ஏக்­கல பள்­ளி­வாசல் விவ­காரம்
அதி உயர் பாது­காப்பு வல­யத்­தி­லுள்ள மஹர சிறைச்­சாலை வளாகத்தி­லுள்ள பள்­ளி­வா­சலை பயன்­ப­டுத்­து­வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­சிலின் தலைவர் என்.எம்.அமீன் எடுத்­து­ரைத்தார்.

அத்­துடன், குறித்த பள்­ளி­வாசல் 1800களில் இரா­ணு­வத்தில் இருந்த மலாய் முஸ்­லிம்­களின் தொழு­கையை நிறை­வேற்­று­வ­தற்­காக ஸ்தாபிக்­கப்­பட்­ட­மையை சுட்­டிக்­காட்­டி­ய­துடன், இப்­பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் மலாய் முஸ்­லிம்கள் பலரும் இருப்­ப­தா­கவும் இங்கு தெரிவிக்கப்­பட்­டது. அத்­துடன், ஏக்­கல பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல் தொடர்ந்தும் மூடப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இது­வி­ட­ய­மாக கருத்­து­ரைத்த பிர­தி­ய­மைச்சர் முனீர் முழப்பர், மஹர பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு தீர்­வாக ராக­மயில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சொந்­த­மான காணி­யொன்றும் அல்­லது சிறைச்சாலைகள் திணைக்­க­ளத்­திற்குச் சொந்­த­மான 20 பேச்சர்ஸ் காணி­யொன்றும் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. எனவே, இதற்கு தீர்வை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பரிந்­து­ரைகள் முன்வைக்கப்பட்டுள்­ளது. சுமு­க­மாக இவ்­வி­ட­யத்தை தீர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

இத­னி­டையே, ஏக்­கல பள்­ளி­வாசல் குறித்து பிர­தேச செய­லா­ள­ரிடம் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தோம். குறித்த பள்­ளி­வாசல் இருக்கும் பகுதியில் பதிவு செய்­யப்­பட்ட முஸ்லிம் மக்கள் இல்லை. எனவே, அப்பி­ர­தே­சத்­திற்கு கள­வி­ஜ­ய­மொன்றை மேற்­கொண்ட பின்­னரே இவ்­வி­ட­யத்­திற்கு ஒரு தீர்வை பெற நட­வ­டிக்கை எடுக்­கலாம் என பிரதி­ய­மைச்சர் மேலும் தெரி­வித்தார்.

முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை ஆராய குழு நிய­மிக்­கவும்
அதே­வேளை கடந்த காலங்­க­ளிலும் அர­சாங்­கங்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்­சி­னைகள் குறித்து அவ்­வப்­போது எங்­க­ளோடு பேசியி­ருக்­கின்­றனர். எனினும், எந்த பிரச்­சி­னைக்கும் தீர்வை பெற்றுக்­ கொ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தில்லை. இதற்கு மாற்று நட­வ­டிக்­கை­யொன்று மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என சிவில் அமைப்­பி­களின் பிர­தி­நி­திகள் பல­ராலும் இங்கு தெரிவிக்கப்பட்­டது.

அமைச்­சர்­க­ளுக்கு அதி­க­மான வேலைப்­ப­ளுக்கள் இருக்­கலாம். அத்தோடு, இரு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை இவ்­வா­றான கூட்­டங்கள் நடத்­தப்­ப­டும்­போது உட­னடித் தீர்வை பெற்­றுக்­கொள்­வது நடைமுறை சாத்­தி­ய­மற்­ற­தாக அமை­கி­றது எனவும் சுட்டிக்காட்டப்பட்­டது.

இதன்­போது, முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆராய்வதற்கு செயற்­கு­ழு­வொன்றை நிய­மிப்­பது தொடர்­பான ஆலோ­ச­னை­யொன்றை கொழும்பு திறந்த பல்­க­லைக்­க­ழக பேராசிரியர் கரீம்தீன் முன்­வைத்தார்.

சிங்­கப்பூர், ஐக்­கிய இராச்­சியம் போன்ற நாடு­களில் இவ்­வா­றான சபைகள் இருக்­கின்­றன. அவற்றின் ஊடாக முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் குறித்து ஆரா­யப்­பட்டு தீர்வை முன்­வைக்கும் பொறிமு­றை­யொன்று அந்­நா­டு­களில் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன. எனவே, அது­போன்ற செயற்­கு­ழு­வொன்றை இலங்­கையில் ஸ்தாபிப்பது குறித்து சிந்­திக்க முடியும் என்றும் பேரா­சி­ரியர் சுட்டிக்காட்­டினார்.

இதற்கு பதி­ல­ளித்த ஆளும்­த­ரப்­பினர், ஹஜ்­குழு மற்றும் வக்பு சபைகளுக்­கான நிய­ம­னங்கள் வழங்­கும்­போது எமக்கு பெரும் நெருக்­கடி ஏற்­ப­டு­கி­றது. ஏரா­ள­மானோர் இவ்­வா­றான சபை­களில் அங்­கத்­துவம் பெற முயற்­சிப்­பதும் பொருத்­த­மா­ன­வர்­களை இனங்காண்­பதில் உள்ள சிக்­கல்­க­ளுமே இதற்கு காரணம். எனவே, சட்­ட­ரீ­தி­யி­லான ஒரு குழு­வொன்றை நிய­மிப்­பது குறித்து பின்னாட்களில் சிந்­திக்­கலாம். தற்­போ­தைக்கு சிவில் அமைப்­பு­களின் முன்­மொ­ழி­வுடன் குழு­வொன்றை நிய­மித்து முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளு­ககு தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அரச தரப்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து முஸ்லிம் சிவில் அமைப்புகளுடனான அடுத்த சந்திப்பை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது

Vidivelli

No comments:

Post a Comment