முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி ஏபா, அவர்களது 3 மகள்கள் மற்றும் மருமகன் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 43 குற்றச்சாட்டுகளுடன் கூடிய குற்றப்பத்திரம் இன்று (26) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பண தூய்தாக்கல் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பண தூய்தாக்கல் தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரை CIABOC அதிகாரிகள் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், அவர்கள் அனைவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment