தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்தும் அதன் விளைவாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்து வரும் நெருக்கடிகளில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கரிசனை செலுத்த வேண்டும் என மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
அத்துடன், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த விஜயத்தின் ஓரங்கமாக சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போதே வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டுகளிலும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் கரிசனை செலுத்துமாறு சுட்டிக்காட்டப்பட்டது.
Vidivelli
No comments:
Post a Comment