நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாய கட்சி மேயர் வேட்பாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 26, 2025

நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாய கட்சி மேயர் வேட்பாளர்

நியூயோர்க் நகர மேயர் பத­விக்­கான ஜன­நா­யகக் கட்­சியின் வேட்பாள­ருக்­கான தேர்­தலில் இந்­திய வம்­சா­வ­ளி­யைக் கொண்ட உகண்டாவில் பிறந்த 33 வய­தே­யான ஸோஹ்ரான் மம்­தானி வெற்றி பெற்­றுள்ளார்.

இதற்­க­மைய நவம்பர் மாதம் நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­தலில் அவர் வெற்­றி­ பெற்றால், முதன்­மு­றை­யாக முஸ்லிம் ஒருவர் நியூயோர்க் நகர மேய­ராகப் பதவி வகிக்கும் வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க வாய்ப்பைப் பெறுவார்.

சுமார் ஒரு மில்­லியன் முஸ்­லிம்­களைக் கொண்ட நியூயோர்க் நகரில், 2021 ஆம் ஆண்டு நடை­பெற்ற மேயர் தேர்­தலில் வாக்­க­ளித்­த­வர்­களில் 12 சத­வீதம் பேர் முஸ்­லிம்­க­ளாவர். 

மம்­தானி தனது தேர்தல் பிரசா­ரத்தின் ஆரம்பம் முதலே தனது மத அடை­யா­ளத்தை முன்­னி­றுத்­தினார். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றுக் கொண்டே பிரசாரம் மேற்­கொண்ட அவர், நக­ரெங்கும் உள்ள பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் சமூக மையங்­க­ளுக்குச் சென்று, அங்­குள்ள மக்­க­ளிடம் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்தார்.

இத் தேர்­தலில் 67 வய­தான முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூ­மோவை அவர் தோற்­க­டித்­தது பல­ரது கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது. 

பெரும்­பா­லான கருத்­துக்­க­ணிப்­பு­களில் கியூமோ முன்­ன­ணியில் இருந்­த­போதும், இளை­ஞர்கள், கறுப்­பின மக்கள், முதன்­முறை வாக்கா­ளர்கள் மற்றும் அவ்­வப்­போது வாக்­க­ளிப்­ப­வர்கள் எனப் பல்வேறு தரப்­பி­ன­ரையும் உள்­ள­டக்­கிய ஒரு பரந்த கூட்­ட­ணியை மம்தானி உரு­வாக்­கி­யதன் மூலம் இந்த வெற்றி சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது. இந்த வாக்கு வங்­கியை அதி­க­ரிப்­பதில் முஸ்லிம் வாக்­கா­ளர்கள் கணி­ச­மான பங்­காற்­றினர்.

நியூயோர்க்கின் சமூக செயற்­பாட்­ட­ள­ரான வஜாஹத் அலி சமூக ஊடகத்தில் கருத்து தெரி­விக்­கையில், “ஒரு முஸ்லிம் குடியேறியவரின் மகன் நியூயோர்க் நக­ரத்தின் மேய­ராக ஆகக்கூடும். இதற்குக் காரணம் அவர் ஒரு யூத வேட்­பா­ள­ரையும் கறுப்­பின வேட்­பா­ள­ரையும் ஆத­ரித்­தது மட்­டு­மல்ல, அவர்­களும் இவரை ஆத­ரித்­ததே. இது நம் அனை­வ­ருக்கும் ஒரு அழ­கான முன்னுதா­ரணம்” என்று குறிப்­பிட்டார்.

காஸாவில் உள்ள பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்­கான தனது வெளிப்­ப­டை­யான ஆத­ரவைத் தெரி­வித்த மம்­தானி, இஸ்ரேல் மீதான விமர்­ச­னங்­களை பகி­ரங்­க­மான முன்­வைத்து வந்தார்.

பிரச்­சா­ரத்தின் இறுதி நாட்­களில், தானும் தனது குடும்­பத்­தி­னரும் கொலை மிரட்­டல்­களைச் சந்­தித்­தாக மம்­தானி கண்­ணீ­ருடன் விவரித்தார். ஒரு­வரின் மதத்தின் அடிப்­ப­டையில் இத்­த­கைய அச்சுறுத்­தல்கள் ஏற்­ப­டுத்­து­கின்ற அச்­சத்­தையும் கவ­லை­யையும் அவர் விளக்­கினார்.

அமெ­ரிக்­காவின் முக்­கிய முஸ்லிம் தலை­வர்­களும் மம்­தா­னியின் வெற்றி குறித்து கருத்து தெரி­வித்­துள்­ளனர். 

அமெ­ரிக்­க-­இஸ்­லா­மிய உற­வு­க­ளுக்­கான கவுன்­சிலின் தேசிய நிர்வாக இயக்­குனர் நிஹாத் அவாத், மம்­தா­னியின் வெற்றி “பலஸ்தீனத்­திற்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி” என்று குறிப்­பிட்டார். மேலும், அவ­ருக்கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும் பாது­காப்பு வழங்கப்­பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த வெற்றி நியூயோர்க் அர­சி­யலில் ஒரு புதிய அத்­தி­யா­யத்தைத் திறந்­துள்­ள­துடன், பல்­வேறு சமூகப் பின்­ன­ணி­களைக் கொண்ட வாக்கா­ளர்­களின் அர­சியல் செல்­வாக்­கையும் பிர­தி­ப­லிக்­கி­றது.

மம்தானியின் பயணம், சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் அரசியல் பங்கேற்பிற்கும் ஒரு வலுவான செய்தியை கூறுவதாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment