பாராளுமன்றத்தை இம்மாதம் 30 ஆம் திகதி கூட்டுவதற்கு அழைப்பாணை விடுத்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளுக்கிணங்க, நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம், பாராளுமன்றம் கூடுவதற்கு சபாநாயகரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 30 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் நிதி திட்டம் தொடர்பான சிறப்பு அறிவிப்பொன்றை அரசாங்கம் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சபையில் அறிவிப்பாரா அல்லது நிதி பிரதியமைச்சர் அதனை சபையில் அறிவிக்க உள்ளாரா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நிதி நிலைமை ஒத்திவைப்பு விவாதத்தை அன்றையதினமே நடத்தவும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதியன்று நடத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment