அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள அராஜகமாக செயற்படும் அரசாங்கம் - சந்திம வீரக்கொடி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 28, 2025

அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள அராஜகமாக செயற்படும் அரசாங்கம் - சந்திம வீரக்கொடி

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்கள் தேவைக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கினர். எனினும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. அதனால் அரசாங்கம் அராஜகமாக உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிகையில், எந்த வழியிலேனும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அரசாங்கத்தினால் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக அன்று நாம் போராடினோம். அந்த போராட்டத்தில் ஜே.வி.பி. முன்னிலை வகித்தது. ஆனால் இன்று ஜே.வி.பி. அதற்கு முரணாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக திட்டமிட்டு நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன.

வெலிகம பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் நாடகம் அரங்கேற்றப்பட்டபோது 400 - 500 பேர் வரையில் சபையை சுற்றி வளைக்கின்றனர். ஆனால் காணாமல் போனதாக கூறப்படும் உறுப்பினர்கள் தனியாகவே சபைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இது திட்டமிட்ட ஒரு நாடகம் என்பது வெளியிலிருந்து பார்க்கும் எந்தவொரு நபருக்கும் மிகத் தெளிவாகத் தெரியும்.

ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்கள் தேவைக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கினர். எனினும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. அதனால் தமது எதிர்பார்ப்பினை நிறைவேற்றிக் கொள்வதற்காக இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றி, அராஜகமாக சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

பல உள்ளுராட்சி மன்றங்களில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுபவர்களால் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் கடமையில் இருக்கும் போதுதான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை ஆச்சர்யமளிக்கிறது. ஆனால் இவை ஆபத்தானவை. மக்களுக்கு இது நன்றாகப் புரியும் என்றார்.

No comments:

Post a Comment