முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (23) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சஜின் டி வாஸ் குணவர்தன 2010 - 2012 ஆம் ஆண்டுகளுக்குட்பட்ட காலப்பகுதிகளில் அரசாங்கத்துக்கு 369 இலட்சம் ரூபா வருமான வரி செலுத்தவில்லை எனக்கூறி, சஜின் டி வாஸ் குணவர்தனவுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் சஜின் டி வாஸ் குணவர்தன இந்த வழக்கு மீதான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் சஜின் டி வாஸ் குணவர்தனவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment