இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற மூன்று இலங்கையர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 28, 2025

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற மூன்று இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற இலங்கையைச் சேர்ந்த மூன்று இலங்கையர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவில் இருந்து தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் திட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற மூன்று பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து வங்கி வரவட்டை, கடனட்டை மற்றும் இலங்கை பணம் ரூ. 46,000 உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து கரையோர பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 34, 43, 33 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்குள் ஊடுருவிய பின் அவர்கள் மூவரும் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

யாழ். நிருபர் பு. கஜிந்தன்

No comments:

Post a Comment