மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் : ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்திய நிசாம் காரியப்பர் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 26, 2025

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் : ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்திய நிசாம் காரியப்பர்

நீண்­ட­ கா­ல­மாக நடத்­தப்­ப­டாமல் பிற்­போ­டப்­பட்­டு­வரும் மாகாண சபைத் தேர்­தல்­களை உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்­கான அழுத்­தத்தை இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஐக்­கிய நாடுகள் ஸ்தாபனம் கொடுக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் நிசாம் காரி­யப்பர் வலியுறுத்­தினார்.

அமைச்சர் பிமல் ரத்­னா­யக்க தலை­மையில் அனைத்துக் கட்­சி­களின் தலை­வர்­களை, ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் துர்க் (Volker Türk) நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் சந்தித்து கலந்­து­ரை­யா­டினார். இதன்­போதே மு.கா. செய­லாளர் மேற்கண்­ட­வாறு வலி­யு­றுத்­தினார்.

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், நாட்டில் நிலை­யான நல்லிணக்­கத்­திற்கு அடிப்­ப­டை­யாக மக்­க­ளாட்சி வலு­வூட்டல் மற்றும் அதி­காரப் பகிர்வின் நடை­மு­றைகள் பின்­பற்­றப்­பட வேண்டும்.

அத்­துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலை­நாடு பகு­தி­களில் வசிக்கும் மக்கள் தங்­க­ளது மாகாண பிர­தி­நி­திகள் ஊடாக அர­சியல் அதி­காரம் செலுத்தும் உரி­மையை பெற வேண்டும். எனவே, நீண்ட கால­மாக நடை­பெ­றாமல் உள்ள மாகாண சபை தேர்­தல்கள் உட­ன­டி­யாக நடத்தப்­பட வேண்டும். இதற்­கான அழுத்­தத்தை ஐ.நா. இலங்கை அரசாங்­கத்­திற்கு கொடுக்க வேண்டும்.

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்­தா­னிகர் துர்க் கருத்து வெளியிடுகையில், மனித உரிமை சவால்­களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த பார்வை தேவை.

குறிப்­பாக, கடந்த காலத்தில் இடம்­பெற்ற இன­வாதம், வன்­மு­றைகள் மற்றும் உள்­நாட்டுப் போர் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட சமுதாயங்களின், குறிப்­பாக தமிழ், முஸ்லிம் மற்றும் மலை­யக மக்கள் வாழும் பகு­தி­களில், சமூக மற்றும் பொரு­ளா­தார மேம்பாடுகள் முன்­னேற வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்

மனித உரி­மைகள் தொடர்­பான அணு­கு­மு­றைகள் சமூ­க­வியல் நுட்பத்­து­டனும், அள­வீட்டு நேர்­மையும், சமூக நீதி மற்றும் பூரணப் பங்­கேற்பும் அடிப்­ப­டை­யி­லா­ன­தாக இருக்க வேண்டும் என்றும் குறிப்­பிட்டார்.

இத­னி­டையே இந்த சந்­திப்பு, இலங்­கையின் தற்­போ­தைய அர­சியல் நிலை, மனித உரிமை தொடர்­பான சவால்கள், போருக்குப் பிறகு சமூகங்களின் மீட்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் மீதான ஐ.நா பார்வையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்திருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

Vidivelli

No comments:

Post a Comment