ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்த ஏழு தூதுவர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்த ஏழு தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

ஆஜன்டீனா குடியரசு (Argentine Republic) சிம்பாப்வே குடியரசு (Republic of Zimbabwe), இஸ்ரேல் (Israel), பிலிபைன்ஸ் குடியரசு (Republic of the Philippines), டஜிகிஸ்தான் குடியரசு (Republic of Tajikistan), கம்போடியா இராச்சியம் (Kingdom of Cambodia) மற்றும் டென்மார்க் ராச்சியம் (Kingdom of Denmark) ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.

இன்று நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்களின் பெயர் விபரம் வருமாறு,

01. Mr. Mariano Agustin Caucino மாரியானோ அகுஸ்டின் கவ்சினோ
புதுடில்லியிலுள்ள ஆஜன்டீனா குடியரசின் தூதரகம்

02. Ms. Stella Nkomo ஸ்டெல்லா ந்கொமோ
புதுடில்லியில் உள்ள சிம்பாப்பே தூதரகம்

03. Mr. Reuven Javier Azar ரூவென் ஹவீயர் அசார்
புதுடில்லி இஸ்ரேல் தூதரகம்

04. Ms. Nina P. Cainglet நினா பி. கயிங்லெட்
டகாவிலுள்ள பிலிபைன்ஸ் துதரகம்

05. Mr. Lukmon Bobokalonzoda லுக்மொன் போபோகலொன்சோடா
புது டில்லியிலிருக்கும் டஜிகிஸ்தான் குடியரசு தூதரகம்

06. Ms. Rath Many ரத் மெனி
புதுடில்லியில் உள்ள கம்போடியா இராச்சியத்தின் தூதரகம்

07. Mr. Rasmus Kristensen ரஸ்மஸ் கிறிஸ்டென்சன்
புதுடில்லியிலுள்ள டென்மார்க் இராச்சியத்தின் தூதரகம்

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment