அதிகாரங்களை கைப்பற்றுவதில் தொங்குநிலை : கூட்டணியமைக்க எதிரணிகள் முஸ்தீபு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 8, 2025

அதிகாரங்களை கைப்பற்றுவதில் தொங்குநிலை : கூட்டணியமைக்க எதிரணிகள் முஸ்தீபு

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களின்படி பெரும்­பா­லான சபைகளில் ஆட்­சி­ய­மைக்க முடி­யாத தொங்கு நிலை­யொன்று ஏற்பட்­டுள்­ளது. எந்தக் கட்­சியும் பெரும்­பான்­மையை பெறாத நிலை ஏற்­பட்­டுள்­ள­மை­யினால் கூட்­டி­ணைந்து அதி­கா­ரத்தை பெற்றுக் கொள்­­வ­தற்­காக வெற்­றி­ பெற்ற கட்­சி­களும் சுயா­தீனக் குழுக்­களும் கூட்­ட­ணி­ய­மைக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், ஆளும் கட்­சி­யினால் பெரும்­பான்மை பெற முடி­யாமல் போன சபை­களில் எதிர்க்­கட்­சிகள் கூட்­டி­ணைந்து ஆட்­சி­ய­மைப்­பது தொடர்பில் ஆராய்ந்து வரு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

குறிப்­பாக பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்தி, ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன மற்றும் சுதந்­திரக் கட்சி சார்­பான குழுக்­களும் இது தொடர்­பாக ஆராய்ந்­து­ வ­ரு­வ­தாக தெரியவ­ரு­கி­றது. 

அத்­துடன், சிறு­பான்மை முஸ்லிம் கட்­சி­களும், மலை­யக கட்­சி­களும் இந்த பேச்­சு­வார்த்­தை­களில் கலந்­து­கொண்­டி­ருப்­ப­தா­கவும் தெரியவரு­கி­றது.

இது­ தொ­டர்­பாக நேற்­றையதினம் பிர­தான எதிர்க்கட்­சிகள் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தன.

ஐக்கிய மக்கள் சக்தி
சகல எதிர்க்­கட்­சி­க­ளையும் ஓர­ணியில் திரட்டி வலு­வான பொது எதிணியை உரு­வாக்க மக்கள் வழங்­கிய ஆணையை முழு மூச்­சுடன் முன்­னெ­டுக்க கட­மைப்­பட்­டுள்­ள­தாக எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தாச சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் நேற்­றையதினம் வெளி­யிட்ட விசேட அறிவிப்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, அவ­மா­னங்கள், அச்சுறுத்­தல்கள், சேறு­பூசும் வார்த்­தைகள், சதித்­திட்­டங்கள் மற்றும் சவால்­க­ளுக்கு மத்­தியில் ஐக்­கிய மக்கள் சக்­திக்கு வாக்­க­ளித்து ஆதரவு வழங்­கிய மக்­க­ளுக்கு நன்­றியைத் தெரி­வித்துக் கொள்கின்றேன்.

அண்­மையில் நடை­பெற்ற பாரா­ளு­மன்ற மற்றும் ஜனா­தி­பதி தேர்தல்க­ளிலும் பெரும் மக்கள் ஆணை­களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம், 6 மாதங்கள் என்ற குறு­கிய காலத்தில் மிகப்­பெ­ரிய சரிவைச் சந்­தித்­துள்­ள­மையை உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. எனவே எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த சகல தரப்­பி­னர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து செயல்­பட வேண்டும் என்ற செய்­தியை நாட்டு மக்கள் இத்­தேர்­தலின் ஊடாக எமக்கு முன்­வைத்­துள்­ளனர். ஜனா­தி­பதித் தேர்­தலை கையாண்­டது போலவே இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­த­லையும் ஜே.வி.பி கையாண்­டது. தேர்­த­லுக்­காக மதத்தைக் கூட அர­சாங்கம் பயன்­ப­டுத்­தியது.

நாட்டு மக்கள் அர­சாங்­கத்தின் பொய்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்துள்­ளனர். உண்­மை­யான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்­கான அங்­கீ­க­ாரத்தை எதிக்­கட்­சிக்கு வழங்கியுள்ளனர். 

பொய்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து, பொய்­களை முறி­ய­டித்து, உண்­மை­யான பலம் வாய்ந்த மக்கள் சேவைக்­காக எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த சகல தரப்­பு­க­ளையும் ஒன்­றி­ணைய வேண்டும் என்ற பொதுமக்­களின் அபி­லா­ஷையின் அடிப்­ப­டையில் இந்த சவா­லான பொறுப்­பிற்கு தலைமை வழங்க ஐக்­கிய மக்கள் சக்தி தயா­ராக உள்ளது.

ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­வர்­க­ளாக, நாங்கள் பொது­மக்­களின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு தலை­வ­ணங்கி, எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த சகல தரப்­பி­னர்­க­ளையும் ஒன்­றி­ணைப்போம். அதன் ஊடாக வெளிப்படைத்­தன்மை வாய்ந்­ததும், கொள்கை ரீதி­யா­ன­து­மான சிறந்த மக்கள் சேவையை வழங்க உள்ளோம். இதற்­கான தலைமைத்­து­வத்தை ஐக்­கிய மக்கள் சக்தி வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மேலும் தெரி­வித்தார்.

பொதுஜன பெரமுன
எதிர்க்­கட்­சி­களை ஒன்­றி­ணைத்து உள்­ளு­ராட்­சி­ மன்­றங்­களை அமைப்­பது குறித்து எதிர்க்­கட்சித் தலை­வரின் யோசனை தொடர்பில் விரி­வாக பரி­சீ­லனை செய்வோம் என ஸ்ரீ லங்கா பொது­ஜன பெரமுனவின் தேசிய அமைப்­பா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்பினருமான நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, கட்சி என்ற ரீதியில் பாரிய சவால்களை எதிர்க்­கொண்­டி­ருந்தோம். நடை­பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்­தலின்போது வேட்­பாளர் ஒரு­வரை கூட களமிறக்குவற்கு முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. கட்­சியை பாதுகாத்துக் கொள்­வ­தற்­காக நெருக்­க­டி­யான நிலையில் பல முக்கிய தீர்­மா­னங்­களை எடுத்தோம்.

கட்சி பாது­காக்­கப்­பட்­டதால்தான் இன்று எம்மால் தேர்­தலில் சுயாதீன­மான முறையில் போட்­டி­யிட முடிந்­துள்­ளது. ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் பெறு­பேற்றைக் காட்­டிலும் உள்ளுராட்­சி ­மன்றத் தேர்­தலில் முன்­னேற்­ற­ம­டைந்­துள்ளோம்.

ஒரு­சில உள்­ளூ­ராட்­சி­ மன்ற அதி­கார சபை­களில் ஆளுங்­கட்­சி­யான தேசிய மக்கள் சக்தி தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யாத நிலைக்கு தள்ளப்­பட்­டுள்­ளது. எதிர்க்­கட்­சி­களை ஒன்­றி­ணைத்து ஆட்சியமைப்ப­தற்கு எதிர்க்­கட்சித் தலைவர் சிரேஷ்ட அர­சியல் அனுப­வத்­துக்கு அமைய அழைப்பு விடுத்­துள்ளார். இந்த விட­யத்தை நாங்கள் விரி­வாக பரி­சீ­லிப்போம்.

தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்­பினை மாத்­திரம் முன்னிலைப்­ப­டுத்தி ஆட்­சிக்கு வந்­தது. நிறை­வ­டைந்த 6 மாத காலத்தில் நாட்டு மக்கள் உண்­மையை விளங்­கிக்­ கொண்­டார்கள். அர­சாங்­கத்தின் மீதான அதி­ருப்தி தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது. இது முடி­வல்ல ஆரம்பம் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி
நான் சொன்ன ஆலோ­ச­னையின் பிர­காரம் செய்­தி­ருந்தால் எதிர்க்கட்சி இந்த தேர்­தலில் வெற்றி பெற்­றி­ருக்கும் என முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முடி­வுகள் தொடர்பில் நேற்று ஊடகங்ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், நான் தெரி­வித்த ஆலோ­ச­னையின் பிர­காரம் ஐம்­பது முதல் நூறு உள்­ளூ­ராட்சி மன்றங்­க­ளுக்கு எதிர்க்­கட்­சிகள் ஒன்­றி­ணைந்து போட்டியிட்டிருந்தால், கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான சபை­களை வெற்றி பெறு­வ­தற்கு இடம் இருந்­தது. குறிப்­பாக கொழும்பில் மாத்திரம் இவ்­வா­றா­ன­தொன்றை செய்­தி­ருக்­கலாம். நாங்கள் தெரிவித்ததுபோல் எதிர்க்கட்சி ஒன்றிணையாததால் மக்கள் பிளவுபட்டு வாக்களித்துள்ளனர்.

ஐந்து வருடங்களுக்கு பின்னர் நாங்கள் யானை சின்னத்தில் போட்டியிட்டோம். இதை ஒரு தொடக்கமாகக் கருதலாம். சில பகுதிகளில் எமது பெறுபேறுகள் திருப்தியாக உள்ளன. இப்போது ஐக்கிய தேசியக் கட்சி புதிதாகச் செயற்பட வேண்டியுள்ளது. இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி மக்களுக்கு சில வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் கூறுவது பொய் என்பது தமக்கு தெரியும் என்பதை மக்கள் இந்த தேர்தலில் உணர வைத்திருக்கின்றனர். பாராளுமன்றத்தில் 159 பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு மக்கள் இந்த செய்தியை வழங்கியிருக்காவிட்டால் அடுத்த 4 ஆண்டுகளுக்கும் இவர்களின் பொய்கள் தொடர்ந்திருக்கும். எவ்வாறிருப்பினும் மக்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.

தற்போது அரசாங்கம் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே அரசாங்கத்துக்கு ஆட்சியமைக்க முடியும். 170 மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த போதிலும், அவை நடைமுறையில் சாத்தியப்படவில்லை.

ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா வேறு எந்த கட்சிகளின் ஆதரவும் தமக்கு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கோரினாலும் ஆதரவளிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பதை ரில்வின் சில்வாவிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். பொய் கூறி மக்களை ஏமாற்றும் உங்களுடன் இணைய வேண்டிய தேவைய எமக்கில்லை. ஆனால் கட்சி பேதங்களை மறந்து சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 170 உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கு நாம் தயார் என்றார்.

இதனிடையே, நேற்றையதினம் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது குறித்து எதிரணிகள் ஒன்றுகூடி பேச்சு நடத்தியிருந்தது. இதன்போது, பலதரப்பட்ட விடயங்களும் ஆராயப்பட்டதாக தெரியவருகிறது.

Vidivelli

No comments:

Post a Comment