இந்தியாவில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 இலங்கையர்களையும் பார்வையிட அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, May 8, 2025

இந்தியாவில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 இலங்கையர்களையும் பார்வையிட அனுமதி

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வா­திகள் என்ற சந்­தே­கத்தின் பேரில் இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்டு தடுத்­து­ வைக்­கப்­பட்­டுள்ள நான்கு இலங்கையர்களை பார்­வை­யி­டு­வ­தற்­கான அனு­மதி இலங்கை இராஜ­தந்­தி­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

இந்­தி­யாவின் மும்­பா­யி­லுள்ள இலங்­கையின் உதவி கொன்சியூேலட் ஜெனரல் சசி­ரங்க ஜய­சூ­ரிய மற்றும் கொன்சியூேலட் ஜெனரல் அலுவலக உள்ளூர் அதி­காரி சுப்­ர­ம­ணியம் செட்­டியா நாரா­யணன் ஆகி­யோ­ருக்கே இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மைய, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் மே மாதம் 29ஆம் திகதி வரையான காலப்பகு­தியில் ஒரு தடவை அஹ­ம­தாபாத் மத்­திய சிறைச்சாலைக்கு விஜயம் செய்து நான்கு இலங்­கை­யர்­க­ளையும் சந்திக்க முடியும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சினால் மும்­பா­யி­லுள்ள கொன்சியூேலட் ஜெனரல் அலுவலகத்­திற்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்­கை­யினைச் சேர்ந்த முஹம்மத் நப்ரான், முஹம்மத் நுஸாரத், அப்துல் றஹீம் முஹம்மத் ரசீதீன் மற்றும் முஹம்மத் பாரீஸ் ஆகியோர் ஐஎஸ்­ஐஎஸ் தீவி­ர­வா­திகள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்­தி­லுள்ள சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலையத்தில் அம்­மா­நில பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேர­த்திற்கும் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இந்தக் கைது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment