களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிரிபத்கொடவிலுள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக தெரிவிக்கப்படும் வழக்கு தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த எழுத்தாணை (ரிட்) மனு விசாரணைக்கு எடுக்கப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மனு, இன்றையதினம் (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் தற்போது மஹர நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் அவர் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, அவர் வெளிநாடு செல்வதை தடுத்து மஹர நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment