வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்திற்கு வருகை தந்தார் இந்தியப் பிரதமர் : இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக் கொண்டார் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 5, 2025

வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்திற்கு வருகை தந்தார் இந்தியப் பிரதமர் : இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்

இந்தியப் பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்திற்கு வருகை தந்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல் அனுராதபுரத்தை வந்தடைந்தார்.

வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment