உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் : அரச உளவுச்சேவை பொலிஸ் உத்தியோகத்தர் கைது : புதிய விசாரணைகளின் கீழ் முதலாவது நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 10, 2025

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் : அரச உளவுச்சேவை பொலிஸ் உத்தியோகத்தர் கைது : புதிய விசாரணைகளின் கீழ் முதலாவது நடவடிக்கை

(கனகராசா சரவணன்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய, அரச உளவுச் சேவையின் கிழக்கு மாகா­ணத்­துக்கு உட்­பட்டு கட­மை­களை முன்­னெ­டுக்கும் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வரை சி.ஐ.டி.யினர் கைது செய்­துள்­ளனர். நேற்றுமுன்தினம் இரவு அவரை கைது செய்ததாக சி.ஐ.டி. உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் அத­னுடன் தொடர்பு­பட்ட சம்­ப­வ­மாக நடந்த வவு­ண­தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரு­வரின் கொலை தொடர்பில், விசாரணைகளை திசை திருப்ப நட­வ­டிக்கை எடுத்­தவிவகாரத்தில் இந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது பிழையான தகவலை வழங்கிய மட்டு. கரடியனாறு தேசிய புலனாய்வுத்துறை சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை குற்றப் புலானாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பில் வைத்து செவ்வாய்க்கிழமை (08) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதுபற்றி தெரியவருவதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் சாஜன்ட் நிரோசன் இந்திர பிரசன்னா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் தினேஸ் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்து அவர்களின் கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் போராளியான விடுதலைப் புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்ற அஜந்தன், பாவித்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசப்பட்டு கிடந்ததாகவும், அந்த படுகொலையை அவரே செய்ததாகவும் அறிக்கையிட்டு பொலிஸார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான அஜந்தன் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டார்.

இந்நிலையில், 2019 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹ்ரானின் சாரதியான முகம்மது சரீப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிர்தௌஸ் மற்றும் நில்காம் ஆகிய 4 பேரை கைது செய்ததன் பின்னர் அவர்கள்தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனர்.

இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைகப்பற்றியதையடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பவத்தை மூடிமறைத்து விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி மீது குற்றம் சுமத்தியுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புபட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிவரும் தேசிய புலனாய்வு சேவையைச் சேர்ந்த இருவரையும் சிஐடியினர் வரவழைத்து அவர்களிடம் விசாரணையை முன்னெடுத்த நிலையில் மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை செவ்வாய்க்கிழமை (8) கொழும்புக்கு வரவழைத்த சிஐடி அவரை கைது செய்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் அத­னுடன் தொடர்பு­பட்ட சம்­ப­வ­மாக நடந்த வவு­ண­தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரு­வரின் கொலை தொடர்பில், விசாரணைகளை திசை திருப்ப நட­வ­டிக்கை எடுத்­த விவகாரத்தில் இந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளிடம் நடாத்­தப்­பட்ட விசா­ர­ணை­களில் அவர் வழங்­கிய வாக்குமூலங்கள், அவ­ரது மேலதி­காரிகள் வழங்­கிய வாக்குமூலங்கள் என அனைத்தும் ஒன்­றுக்­கொன்று முர­ணா­னது என உறுதி செய்­யப்­பட்ட நிலையில், குறித்த இடயம் தொடர்பில் இக்கைது நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

வவுண தீவு கொலை விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை திசை திருப்ப உள­வுத்­துறை முன்­னெ­டுத்த நட­வ­டிக்கை காரணமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சந்தேகநபர்களை கைது செய்வது சாத்தியமற்று போனதாக கருதப்படும் நிலையிலேயே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment