யோஷித மற்றும் டெய்சி பாட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் : 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 4, 2025

யோஷித மற்றும் டெய்சி பாட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் : 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பு

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது.

குறித்த இருவர் மீதும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் கையளிக்கப்பட்டன.

இதன்போது பிரதிவாதிகளை ரூ. 5 இலட்சம் பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, இது தொடர்பான விரிவான விசாரணைகளை மே 30ஆம் திகதி நடத்துவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment