முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு அவர் கைதானார்.
களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
அது கிரிபத்கொடை புதிய நகரத்தை நிர்மாணிப்பதற்காக 2010ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணியாகும்.
இந்த காணி மோசடிக்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment