மாத்திரைகளை உட்கொண்ட 1 ½ வயது குழந்தை பலி : பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மருந்து - News View

About Us

Add+Banner

Wednesday, March 5, 2025

demo-image

மாத்திரைகளை உட்கொண்ட 1 ½ வயது குழந்தை பலி : பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மருந்து

89965
முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறி பகுதியில் பாதுகாப்புபற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்டதில் 1 ½ வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது

குறித்த பகுதியை சேர்ந்த அன்டனி சஞ்யித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்புபற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மருந்து மாத்திரைகளை தவறுதலாக உட்கொண்டதில் 1 ½ வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது

நேற்று (04) மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது

பரந்தன் நிருபர்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *