இலங்கை இராணுவத்தின் புதிய பணிக்குழாம் பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பெப்ரவரி 09 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு இராணுவத்தில் ஒரு கெடட் அதிகாரியாக இணைந்து, தற்போது இராணுவத்தின் 45ஆவது பிரதி பணிக்குழாம் பிரதம அதிகாரியாகப் பணியாற்றி வரும் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, கஜபா படைப்பிரிவில் இணைந்து பணியாற்றிய சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஆவார்.
மாத்தளையில் பிறந்த இவர், மாத்தளை விஜய வித்தியாலயம் மற்றும் கண்டி தர்மராஜ வித்தியாலயத்தின் சிறந்த பழைய மாணவராவார்.
No comments:
Post a Comment