முஸ்லிம் பெண்களால் ஏன் காதி நீதிபதியாக முடியாது? : கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் சர்வேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Friday, February 14, 2025

முஸ்லிம் பெண்களால் ஏன் காதி நீதிபதியாக முடியாது? : கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் சர்வேஸ்வரன்

முஸ்லிம் பெண்கள் இன்று அதிகம் சட்­டத்­து­றையில் நாட்டம் காட்டுகின்­றனர். எதிர்­கா­லத்தில் அவர்­களால் உயர் நீதி­மன்ற நீதியரசர்­க­ளாக பதவி வகிக்க முடியும் என்றால் ஏன் அவர்­களால் காதி நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளாக வர முடி­யாது என கொழும்பு பல்­க­லைக்­க­ழக சட்­ட­பீட சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் பேரா­சி­ரியர் ஏ. சர்­வேஸ்­வரன் கேள்வி எழுப்­பினார்.

உஸ்தாத் மன்சூர் எழு­திய இஸ்­லா­மிய ஷரீஆ யதார்த்­தமும் பிரயோகமும் எனும் நூல் வெளி­யீட்டு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடைபெற்­றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு பேரா­சி­ரியர் சர்­வேஸ்­வரன் மேலும் குறிப்­பி­டு­கையில், அதிகமான முஸ்லிம் பிள்­ளைகள் என்­னிடம் சட்டக் கல்வி பயில்கிறார்கள். அதிலும் ஆண் பிள்­ளை­களை விட பெண் பிள்ளைகளே அதி­க­மாக சட்டம் படிக்­கி­றார்கள். அவர்கள் எதிர்காலத்தில் உயர் நீதிமன்ற நீதி­ய­ர­சர்­க­ளாக வரக்கூடிய வாய்ப்புக்கள் உள்­ளன. 

தமது அறிவின் கார­ண­மாக அவர்­களால் உயர் நீதி­மன்ற நீதியரசர்களாக வர முடியும் என்றால் ஏன் அவர்கள் காதி நீதிமன்றங்களில் நீதி­ப­தி­க­ளாக வர முடி­யாது என்ற கேள்வி என்னிடம் இருக்­கி­றது. 

எனவே நாம் காலத்­திற்கு ஏற்றவாறு மாற்றங்களை கொண்டு வர வேண்டியுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment