மஹிந்த ராஜபக்ஷவின் மகன் என்பதற்காக கைது செய்யவில்லை - அமைச்சரவை பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2025

மஹிந்த ராஜபக்ஷவின் மகன் என்பதற்காக கைது செய்யவில்லை - அமைச்சரவை பேச்சாளர்

யோஷித ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் மகன் என்பதற்காக கைது செய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எவராவது சந்தேகத்திற்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் தெரிவிப்பது போல சமீபத்தைய கைதுகளுக்கு அரசியல் பழிவாங்கல் காரணமில்லை.

எவராவது சந்தேகத்துக்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சிஐடியினர் அது குறித்து விசாரணை செய்வார்கள். சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். யோஷித. மஹிந்த ராஜபக்ஷவின் மகன் என்பதற்காக கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. அவை தொடர்கின்றன. சிஐடியினரும் பொலிஸாரும் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை நீதிமன்றத்திற்கு தெரிவித்து உரிய முறையில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment