மல்வானையைச் சேர்ந்த மொஹமட் ஜிப்ரி சம்சுல் ஹுஸைன் என்பவர் காணாமல் போயுள்ள நிலையில் பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
தனது மகனை கடந்த இரண்டு மாதங்களுக்கு அதிகமாக காணவில்லையென, தந்தை செய்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் குறித்த நபரை தேடி வருகின்றனர்.
குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் விபரங்கள் தெரிந்தால் பியகம பொலிஸ் நிலயப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
26 வயதான குறித்த நபரை கடந்த டிசம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் காணவில்லையென பியகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
385C, வல்கம, மல்வானை முகவரியைச் சேர்ந்த குறித்த நபர், சுமார் 6 அடி உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெலிந்த தோற்றம் கொண்ட இவர், மீசை வைத்திருப்பார் எனவும், இறுதியாக செம்மஞ்சள் நிற நீண்ட காற்சட்டை மற்றும் இளம் நீல நிற கோடு கொண்ட சேர்ட் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
071 8591600
பொலிஸ் நிலையம்
011 2487574
No comments:
Post a Comment