நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 18 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC/ CEYPETCO) அறிவித்துள்ளது.

அந்த வகையில், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 313 இலிருந்து ரூ. 331 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகள் மாற்றமின்றி பேண முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாத விலைத் திருத்தத்திற்கு அமைய, மண்ணெண்ணெய் விலை மாத்திரம் ரூ. 5 இனால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் CEYPETCO எரிபொருள் விலைகள் வருமாறு

CEYPETCO/ LIOC

சுப்பர் டீசல்
ரூ. 18 அதிகரிப்பு - ரூ. 313 இலிருந்து ரூ. 331

மண்ணெண்ணெய்
விலையில் மாற்றமில்லை - ரூ. 188

பெற்றோல் 92
விலையில் மாற்றமில்லை - ரூ. 309

ஒட்டோ டீசல்
விலையில் மாற்றமில்லை - ரூ. 286

பெற்றோல் 95
விலையில் மாற்றமில்லை - ரூ. 371

No comments:

Post a Comment