டொனால்ட் ட்ரம்பின் கொள்கையை ஆதரித்து இலங்கையில் பேரணி ! அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக கூடிய தாய்மார் - News View

About Us

About Us

Breaking

Friday, January 24, 2025

டொனால்ட் ட்ரம்பின் கொள்கையை ஆதரித்து இலங்கையில் பேரணி ! அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக கூடிய தாய்மார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் LGBTQ இற்கு எதிரான கொள்கைக்கு இலங்கையின் தாய்மார்கள் அமைப்பான அன்னையர் முன்னணி (Mothers Movement) அமைப்பு ஆதரவை வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக நேற்றையதினம் (23) கூடிய இந்த இலாப நோக்கற்ற அமைப்பானது, அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்க்கை சார்பு பிரசாரத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, அவரது முடிவானது, நாடுகளை அழிவுகரமான LGBTQ நிகழ்ச்சி நிரலில் இருந்து பாதுகாக்கிறது எனக் கூறியது.

இலங்கை அன்னையர் முன்னணி இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் தர்ஷனீ லஹந்தபுர இது தொடர்பில் தெரிவிக்கையில், இலங்கையில் சிதைக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டங்களை சட்டப்பூர்வமாக்குவதை சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கோரிக்கை விடுப்பதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டங்களை சட்டபூர்வமாக்குவது இலங்கையின் மத மற்றும் கலாசார விழுமியங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கையளிப்பதற்கான கோரிக்கை மனு ஒன்றை அவர்கள் அமெரிக்க தூதரகத்திடம் இதன்போது கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment