வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 18 ஆம் திகதி வெள்ளவத்தையில் உள்ள தனியார் வைத்தியசாலை விடுதிக்கு வெளியே பெண்ணொருவர் வேன் ஒன்றில் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 31,500 ரூபாய் மற்றும் பிற பெறுமதியான பொருட்களை கொள்ளை அடித்துக் கொண்டு வெலிக்கடையில் பெண்ணை கைவிட்டு சென்றுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் முன்னர் பொலிஸ் பிரிவில் கடமையாற்றி சேவையிலிருந்து பணி இடைநிறுத்தப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment